தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது இரண்டாவது அலையின் சீற்றம் குறைந்ததன் காரணமாக படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 - 12ஆம் வகுப்பு வரையும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1 - 8ஆம் வகுப்பு வரையும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
Topic- 10th Tamil Reduced syllabus Revision test portion File type- PDF
சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுக்கான பாடத்திட்டங்களை பள்ளிக் கல்வி ஆணையர் அனுப்பி வைத்துள்ளார். அதில், 2021-22ஆம் கல்வியாண்டிற்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு பாடத்திட்டங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அந்த பாடத்திட்டங்களின் அடிப்படையில் திருப்புதல் தேர்வுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். 10ஆம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.
12ஆம் வகுப்பை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் - தாவரவியல், உயிரியல் - விலங்கியல், உயிர் வேதியியல், நுண்ணியிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், பொருளியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட 27 பாடங்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment